News April 11, 2025
ஈரோடு: வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி

ஈரோடு, ஞானிபாளையம், தண்ணீர்பந்தலை சேர்ந்தவர் குருவன் (80). இவர் கடந்த 8-ம் தேதி வெள்ளோடு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வேப்பிலை பிரிவு குன்னாங்காட்டுவலசு பகுதியில் செல்லும் வாய்க்காலில் குருவன் பிணமாக கிடந்தார். சென்னிமலை காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 14, 2025
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேற்று (13.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலர், பணியாளர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உட்பட பலர் உள்ளனர்.
News August 13, 2025
ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை ஆக,14 கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. தாளவாடி ஒன்றியம்-சமுதாயகூடம்-சிம்டஹல்லி, சத்தியமங்கலம் ஒன்றியம்-காமாட்சி அம்மன் கோவில் மண்டபம்-அரசூர், மொடக்குறிச்சி ஒன்றியம்-கொங்கு மஹால்-முகாசி அனுமன்பள்ளி, சென்னிமலை ஒன்றியம்-தேவி மஹால்-பாலாஜி கார்டன், பவானி ஒன்றியம்-சிவகாமி மஹால்-சூரியம்பாளையம்.
News August 13, 2025
ஈரோட்டில் பதிவு செய்தால்: நஷ்டம் இல்லை APPLY NOW !

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு காரீப் – 2025 பருவத்தின் பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது. அதற்கு ஹெக்டருக்கு ரூ.300 முதல் பிரீமியத் தொகை செலுத்தி ரூ.30,000 வரை பயிர் இழப்பீடு பெறலாம். மேலும் செப்.16 க்குள் அரசு பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அறிவித்தார்.