News February 23, 2026
ஈரோடு: லஞ்சம் கேட்டால் உடனே CALL

ஈரோடு மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 0424-2210898 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!
Similar News
News March 10, 2026
ஈரோடு: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
ஈரோட்டில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படை!

ஈரோடு: 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் அஜய்குமார் தலைமையில் 91 காவலர்கள் நேற்று கோபி பாரியூர் கோவில் திருமண மண்டபத்திற்கு வருகை புரிந்தனர். இதில் ஆய்வாளர் ஒருவர், 5 ஏ.எஸ்.ஐ-க்கள் மற்றும் 85 காவலர்கள் என மொத்தம் 91 பேர் தகுந்த வசதிகளுடன் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
News March 10, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (09.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


