News September 7, 2025
ஈரோடு: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
Similar News
News September 8, 2025
ஈரோடு: DRIVING தெரிந்திருந்தால்! அரசு வேலை

ஈரோடு மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 8, 2025
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை ALERT!

ஈரோடு மக்களே இணைய வாயிலாக பல மோசடிகள் நடந்து வருகிறது, அதனைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் தற்பொழுது வேலைவாய்ப்பு, யூட்யூப் லைக், ரேட்டிங், டெலிகிராம் டாஸ்க் என தங்கள் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி தங்களுடைய பணத்தை இழக்க வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது. உதவிக்கு மாவட்ட எஸ்பி எண் 0424-2260100 (அ ) 1930 அழைக்கவும்.
News September 7, 2025
ஈரோடு: தங்கம், பணம் தந்து இலவச திருமணம்!

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க.!