News August 8, 2025
ஈரோடு: மின் கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஏடி காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில், இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
Similar News
News August 8, 2025
ஈரோடு: ரூ.70,000 பணம், தங்கம் தந்து இலவச திருமணம்!

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், இந்து அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT
News August 8, 2025
ஈரோடு மக்களே: முதல்வருக்கே புகார் அளிக்கலாம்!

ஈரோடு மக்களே, உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <
News August 8, 2025
ஈரோடு: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <