News October 21, 2025
ஈரோடு மாவட்ட குழந்தை தொழிலாளர் மீட்பு இலவச எண்!

ஈரோடு, தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்தல் மற்றும் மீட்பு குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பது முக்கிய முன்னுரிமைகள் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் குழந்தைகள் மீட்பு இலவச தொலைபேசி எண்.1098 தொடர்பு கொள்ளவும்.
Similar News
News October 22, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, காஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், குற்றிக்காரன்பாளையம், வேலாங்காட்டு வலசு, நஞ்சை ஊத்துக்குளி, டி.மேட்டுப்பாளையம், அணைக்கல் பாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளயம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News October 22, 2025
ஈரோடு அருகே தூக்கிட்டு தற்கொலை!

தருமபுரி, கெண்டைநல்லி, காவக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன்,35, தனது மனைவி ராஜேஸ்வரி, 2 குழந்தைகளுடன் சென்னிமலை, 1010 நெசவாளர் காலனியில் வசித்து கொண்டு லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். முருகனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து தற்கொலை செய்வதாக அடிக்கடி கூறி வந்தவர், நேற்று இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 22, 2025
பவானி: வெள்ள அபாய எச்சரிக்கை!

கோணமூலை ஊராட்சி பவானி ஆறு கரையோர பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் பவானி ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலைக்கும் அதிகமாக பலமடங்கு வெள்ளம் வந்த வண்ணம் உள்ளதால் பவானி ஆறு கரையோரம் குடியிருப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லவும். ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றில் இறங்கி செல்போன் மூலம் செல்பி எடுக்கவோ கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.