News September 11, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அணிக்கு முதல் பரிசு

image

தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபாடி போட்டிகள் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட காவல்துறை கபாடி அணி, முதல் பரிசை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்ற மற்ற அணிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Similar News

News September 10, 2025

ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (செப். 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

News September 10, 2025

ஈரோடு: B.E./B.Tech படித்திருந்தால் வேலை!

image

ஈரோடு மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News September 10, 2025

ஈரோடு: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உயிரிழப்பு

image

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட வர்ணபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி வயது 72 என்ற முதியவர், முதியோர் உதவித்தொகை வேண்டி மனு கொடுக்க உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமிற்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!