News November 13, 2025
ஈரோடு மாவட்டத்தில் 23 காவல் உதவி ஆய்வாளர்கள் மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 23 காவல் உதவி ஆய்வாளர்கள் (Sub-Inspectors) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி மாற்ற உத்தரவை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிறப்பித்துள்ளார். புதிதாக வெளியிடப்பட்ட உத்தரவின்படி, மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய காவல் நிலையங்களில் உடனடியாக அறிக்கை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 13, 2025
ஈரோடு குழந்தை தொழிலாளர் மீட்பு இலவச எண்!

ஈரோடு, தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது மற்றும் மீட்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது முக்கிய முன்னுரிமையாக உள்ளது. குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவதை கண்டால், உடனடியாக 1098 இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள தொழிலாளர் துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
News November 13, 2025
கடம்பூர் அருகே யானை உயிரிழந்தது!

சத்தியமங்கலம் வனச்சரகம், குத்தியாலத்தூர் காப்புக்காடு, கொண்டப்பநாயக்கன் பாளையம் காவல் சுற்று, வனப்பகுதிக்குள் வனப்பணியாளர்கள் ரோந்து சுற்றி வரும் பொழுது, பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். யானை உடலில் காயங்கள் இல்லாதால் இயற்கை மரணம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், யானை உடல் அரசு வழிகாட்டுதல் படி பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
News November 13, 2025
வெயிலில் முதலிடம் பிடித்த ஈரோடு!

தமிழ்நாட்டில் இன்று (13-11-25) அதிக அளவாக, ஈரோட்டில் 96.08 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 35.6 டிகிரி செல்சியஸ் வெயில் (96.08 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.


