News May 7, 2024
ஈரோடு மாவட்டத்திற்கு எச்சரிக்கை

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் எப்போது?

ஈரோடு மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2024-25ம் ஆண்டுக்கான செயல்பாடுகளின் செலவினங்கள் மீதான சமூக தணிக்கை மேற்கொள்ள சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறும். இடம் நேரம் ஆகியவை குறித்து தொடர்புடைய கிராம ஊராட்சி மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். முறையாக கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க வட்டார அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News July 5, 2025
சமூக நலத்துறையில் பணி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழில் நுட்ப உதவியாளர், பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 10,12 மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட இணைய தள முகவரி <
News July 5, 2025
எச்சரிக்கை! ஆன்லைன் நட்பால் ஆபத்து

கரூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (30); இவர் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக உள்ளார். இவர் மொபைல் செயலி மூலம் ஒருவரிடம் பேசியதில்,பெண்ணுடன் தனிமையில் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.இதை நம்பி நேற்று முன்தினம் சென்ற ஜெகதீசனை, 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி 30 ஆயிரம் ரூபாய், பைக்கை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் விசாரணை.