News April 21, 2025
ஈரோடு: மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி பலி!

ஈரோடு, அத்தாணி அருள்வாடிபுதூரைச் சேர்ந்தவர் முருகன் (55) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து, உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 7, 2025
ஈரோடு வரும் CM ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 26, 27-ம் தேதிகளில் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது, இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் துவக்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
News November 7, 2025
ஈரோடு: 10 PASS போதும்..! ரூ.50,000 வரை சம்பளம்

ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)
News November 7, 2025
ஈரோடு: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.


