News August 20, 2025

ஈரோடு: மனைவிக்கு கணவர் கத்தி குத்து!

image

ஈரோடு: சூரம்பட்டியைச் சேர்ந்த தம்பதி மாதேஸ்வரன் (36) – கோகிலா (33). இவர்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக 1½ மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து ஈரோடு பெரியார்நகரில் உள்ள தாய் வீட்டில் கோகிலா வசித்து வந்தார். இந்நிலையில், பெரியார்நகர் வந்த மாதேஸ்வரன், கோகிலாவுடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவரைக் கத்தியால் குத்தினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 13, 2026

ஈரோடு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், ஈரோடு மாவட்ட மக்கள் 0424-2210898 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 13, 2026

ஈரோடு: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 13, 2026

ஈரோட்டில் மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அறிவிப்பு!

image

மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 16-ஆம் தேதி ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மஞ்சள் கிடங்கு உரிமையாளர் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வியாபாரிகள் பலர் மகா சிவராத்திரி விழாவிற்குச் செல்வதால், அன்றைய தினம் மஞ்சள் ஏலம் நடைபெறாது என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

error: Content is protected !!