News March 2, 2026
ஈரோடு மக்கள் கவனத்திற்கு

சமூக வலைதளங்களில் பரவும் 77.4% போலிச் செய்திகள் அரசியல் மற்றும் மதக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக ஈரோடு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். எக்ஸ், பேஸ்புக் போன்ற தளங்களில் உணர்ச்சிப்பூர்வமான தலைப்புகள் மூலம் இவை வேகமாகப் பரப்பப்படுகின்றன. மக்கள் எந்தவொரு தகவலையும் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 2, 2026
மஞ்சள் சந்தை: ஹோலிபண்டிகை விடுமுறை தேதியில் மாற்றம்

ஈரோடு மஞ்சள் சந்தையில் ஹோலி பண்டிகை விடுமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி பண்டிகை கொண்டாடப்படுவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 3-ம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மார்ச் 4 (புதன்கிழமை) அன்று சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
News March 2, 2026
ஈரோடு மக்கள் கவனத்திற்கு

சமூக வலைதளங்களில் பரவும் 77.4% போலிச் செய்திகள் அரசியல் மற்றும் மதக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக ஈரோடு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். எக்ஸ், பேஸ்புக் போன்ற தளங்களில் உணர்ச்சிப்பூர்வமான தலைப்புகள் மூலம் இவை வேகமாகப் பரப்பப்படுகின்றன. மக்கள் எந்தவொரு தகவலையும் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News March 2, 2026
ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

முன்பின் தெரியாத நபர்கள் தங்கள் நண்பர் அனுப்பும் பணத்தை உங்கள் வங்கி அல்லது UPI கணக்கில் பெற்று தர கோரினால், அதை உடனடியாக நிராகரியுங்கள் என ஈரோடு காவல்துறை எச்சரித்துள்ளது. இணைய திருடர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க, அப்பாவி மக்களின் கணக்குகளைப் பயன்படுத்தி அவர்களை குற்றவாளிகளாக்குகின்றனர். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இத்தகைய மோசடிகளில் சிக்காமல் காத்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


