News September 18, 2025
ஈரோடு: பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு: கனகபுரம் கொமராபாளையத்தை சேர்ந்த குமாரின் மனைவி பாப்பாத்தி (54). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அறச்சலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
ஈரோட்டில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஈரோடு மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. அரசு ஐடிஐ வளாகத்தில் நாளை(செப்.19) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 100க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறுத்து மேலும் விவரங்களுக்கு 8675412356 எண்ணை அணுகவும். பதிவு செய்ய <
News September 18, 2025
ஈரோடு: இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

ஈரோடு மாவட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்று செப்டம்பர் 18 அன்று பவானி கோபி நம்பியூர் பெருந்துறை தாளவாடி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது. எனவே மக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அதிகாரிகளிடம் வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
News September 18, 2025
ஈரோடு இன்று இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பவானி, கோபி. சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சி பகுதிகள் காவல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தடுக்கப்படுகிறது.