News April 10, 2025
ஈரோடு: நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஈரோடு, கொங்கம்பாளையம், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதிநேர நகை மதிப்பீடு, அதன் நுட்பங்கள் குறித்த பயிற்சி, வரும் ஏப்.15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்.,13 வரை ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 0424-2998632 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை பெற நினைக்கும் உங்களது நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
Similar News
News December 16, 2025
ஈரோட்டில் வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

ஈரோடு வி.வி.சி.ஆர். நகர், செல்வ விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த சகானி (52), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 7 ஆண்டுகளாக ஈரோட்டில் டைல்ஸ் வேலை செய்த அவர், நேற்று அதிகாலை அருகிலுள்ள காலிங்கராயன் வாய்க்காலில் கை, கால் கழுவ முயன்ற போது விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்..

பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் அருகே உள்ள மின்கோட்ட அலுவலகத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நாளை 17ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஈரோடு மேற்பார்வை பொறியாளர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர் பகுதியை சேர்ந்த மின் பயனீட்டாளர்களின் தங்களது நிறை,குறைகளை தெரிவிக்கலாம்,
News December 16, 2025
கவுந்தப்பாடி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

கவுந்தப்பாடி அடுத்த பழனிசாமி கவுண்டர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை, விற்பனை செய்வதாக கவுந்தப்பாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், போலியாக வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்ட எங்களை கொண்டு லாட்டரி என விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


