News November 3, 2025

ஈரோடு: தேசிய நெடுஞ்சாலையில் திடீர் விபத்து!

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வடவள்ளி அருகே பொள்ளாச்சி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மங்களூரில் இருந்து மாட்டு தீவனபாரம் ஏற்றிக் கொண்டு பெருந்துறை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அருகில் இருந்தவர்கள் ஓட்டுநரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

Similar News

News November 3, 2025

போதை உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும்:போலீசார் அறிவுறை!

image

போதைப் பொருட்களின் ஆபத்து குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ஒரு நிமிடம் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும்..! Say No To Drug” என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வுச் சுவரொட்டிகளை ஈரோடு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

News November 3, 2025

ஈரோடு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; கடைசி நாள்: நவ.10.ஆகும்:உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

ஈரோட்டில் 97.8 டிகிரி பாரன்ஹீட் பதிவு!

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று வறண்ட வானிலை காணப்படுகிறது. குறிப்பாக பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. ஈரோடு மாநகரில் நேற்று வெயில் சுட்டெரித்தது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. ஈரோட்டில் நேற்று, 36.6 டிகிரி செல்சியஸ் வெயில் (97.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவானது.

error: Content is protected !!