News July 24, 2024

ஈரோடு: டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கீடுக்கு வரவேற்பு

image

மத்திய பட்ஜெட்டில் கடுகு, எள், சூரியகாந்தி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையும், குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதலும் செய்யப்படும் என்பது சிறந்தது. டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கீடு அறிவிப்பை வரவேற்கலாம். இயற்கை விவசாயத்துக்கு, 1 கோடி பேருக்கு பயிற்சி செயல்முறைப்படுத்த வசதி ஏற்படுத்தப்படும் என கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

பல்வேறு திருட்டு வழக்கு: வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

image

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அகதிகள் முகாமைச் சேர்ந்த ராகவன் (எ) கோழிக்கரன்-25 மீது பவானி, பவானிசாகர் பகுதிகளில் பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பவானி சிறையிலிருந்த அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News March 3, 2026

ஈரோட்டில் வேலை தேடும் இளைஞர்களே உஷார்!

image

ஈரோடு மக்களே, ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் வேலையில் இருப்பவர்கள் என்று ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, பண மோசடியில் பொதுமக்கள் யாரும் சிக்கிவிட வேண்டாம் என்று சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் சைபர் க்ரைம் எண்.1930 தொடர்பு கொள்ள கொள்ளலாம் என தெரிவித்தனர்.

News March 3, 2026

ஈரோடு விடுமுறை நாளில் மாற்றம்!

image

ஈரோடு மஞ்சள் சந்தையில் ஹோலி பண்டிகை விடுமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி பண்டிகை கொண்டாடப்படுவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 3-ம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மார்ச் 4 (புதன்கிழமை) அன்று சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!