News September 14, 2024

ஈரோடு: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி (செவ்வாய்கிழமை) மிலாது நபியை முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 19, 2025

ஈரோட்டில் 5 பேர் கைது: போலீஸ் அதிரடி

image

ஈரோடு: பெருந்துறை அடுத்துள்ள மூங்கில் பாளையத்தில் பரமேஸ்வரன் என்பவரது வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது 5 பேர் பண வைத்து சூதாடியது தெரிந்தது. இதில் பரமேஸ்வரன், பாஸ்கரன் ,சீனாபுரம் கிருஷ்ணன், நாகராஜ் கொட்டாம்புலியூர் அசோக், பெருமாநல்லூர் சின்னச்சாமி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

News September 18, 2025

ஈரோடு இன்று இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பவானி, கோபி. சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சி பகுதிகள் காவல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தடுக்கப்படுகிறது.

News September 18, 2025

ஈரோட்டில் அரசு பேருந்து ஓட்டுநரின் நேர்மை

image

சத்தியமங்கலத்தில் அரசு பேருந்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணத்துடன் இருந்த பையை தவற விட்ட மூதாட்டியிடம் பத்திரமாக எடுத்து ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் மாதேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாராட்டு. மேலும் பணம் மற்றும் நகையை பாதுகாப்பாக எடுத்து ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

error: Content is protected !!