News September 19, 2025
ஈரோடு – செங்கோட்டை ரயில் சேவை பகுதி ரத்து

ஈரோடு – கரூா் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, ஈரோடு – செங்கோட்டை (16845 / 16846) ரயில் சேவை வருகிற 22, 25, 28, 30, அக். 3, 6 ஆகிய தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு – கரூா் சேவை ரத்து செய்யப்பட்டு, கரூா் – திண்டுக்கல்- கரூா் இடையே மட்டும் இந்த ரயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 19, 2025
ஈரோட்டில் அரசு பஸ் மோதி விபத்து!

கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. விண்ணப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிர்திசையில் கோவை நோக்கி அதி வேகமாக சென்ற பூ வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 19, 2025
ஈரோடு: மனைவியுடன் சண்டயால் தற்கொலை!

ஈரோடு: என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி விக்னேஷ் (30). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 16ஆம் தேதி மது போதையில் தனது மனைவி கீதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த விக்னேஷ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 19, 2025
ஈரோடு: டிகிரி முடித்தால் அரசு வேலை!

ஈரோடு மக்களே.., தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.3ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <