News November 21, 2025

ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 7 ஆண்டு சிறை!

image

ஈரோடு, சித்தோடு கொங்கம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (69). 8.7.2024 அன்று கோவிலுக்கு வந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கம்பக்கத்தினர் கண்டு சிறுமியை மீட்டு பவானி மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் அவரை கைது செய்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணகுமார் சுப்பிரமணிக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்ததுடன், சிறுமிக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க பரிந்துரைத்தார்.

Similar News

News November 21, 2025

ஈரோடு: தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

image

ஈரோடு மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 21, 2025

ஈரோட்டில் அதிகபட்ச வெயில் பதிவு

image

தமிழ்நாட்டில் நேற்று (20-11-25) அதிக அளவாக, ஈரோட்டில் 95.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 35.2 டிகிரி செல்சியஸ் வெயில் (95.36 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.

News November 21, 2025

அந்தியூர் அருகே திருநங்கை தற்கொலை

image

அந்தியூர் அருகே கழுதைப்பாலி கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை ரபியா (27) கடந்த சில மாதங்களாக ஒருவருடன் கைப்பேசியில் பேசிவந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு திடீரென அறைக்குள் சென்று ரபியா சேலையால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டாலும், மருத்துவமனையில் அவர் இறந்ததாக கூறப்பட்டது. அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!