News September 10, 2025
ஈரோடு: கோயிலில் ஏற்பட்ட சோகம்!

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே நல்லகட்டிபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 30) என்பவர். நேற்று தனது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் சென்னிமலை முருகன் கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாக நடந்து வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் படிக்கட்டுகள் வழியாக இறக்கிய போது 630-வது படிக்கட்டில் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News March 8, 2026
ஈரோடு: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News March 8, 2026
ஈரோடு: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 8, 2026
பெருந்துறையில் களமிறங்கும் இபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் இதுவரை 190 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி காஞ்சிகோவில் ரோட்டில் அவர் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, நாளை மாலை 5.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் பவானியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


