News October 31, 2025
ஈரோடு: குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு

ஈரோடு மாவட்ட காவல்துறையினர் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்திய சட்டப்படி, பெண்கள் 18 வயது, ஆண்கள் 21 வயது ஆனதற்கு முன் திருமணம் செய்யக்கூடாது. இளம் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவதால், சமூகத்தில் இதனை தடுப்பது முக்கியம். குழந்தை திருமணத்தின் எதிர்மறை விளைவுகள், கல்வி மற்றும் உடல் நலத்திற்கு பாதிப்பு குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
Similar News
News October 31, 2025
ஈரோடு: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
ஈரோட்டில் வடமாநில தொழிலாளி பலி!

ஈரோடு வெட்டுக்காட்டுவலசில் மில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த ஒடிசாவை சேர்ந்த லபான் பாட்டியா (44) கடந்த 26ஆம் தேதி மயங்கி விழுந்து தலையில் காயமடைந்தார். இதன் பின்னர் அவர் மனநிலை பாதிக்கப்பட்டதை போல பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு வடக்கு போலீசார் விசாரணை!
News October 30, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


