News February 24, 2026

ஈரோடு: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHAREIT

Similar News

News February 24, 2026

மாநில அளவில் ஈரோடு முதலிடம்

image

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று (பிப்ரவரி 23) தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 35.2°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. உள்மாவட்டங்களில் வெயில் தீவிரமடைந்த நிலையில், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் உணரப்பட்டது. கடலோரப் பகுதிகளில் மிதமான வெப்பமும், தெற்கு மாவட்டங்களில் குறைந்த வெப்பமும் நிலவியது குறிப்பிடத்தக்கது.

News February 24, 2026

ஈரோடு: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News February 24, 2026

ஈரோடு: பேத்தியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாத்தா கைது!

image

ஈரோடு அருகே 3 வயது சிறுமியின் தந்தை வழி தாத்தா கந்தசாமி, அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. வேலை முடிந்து வீடு திரும்பிய தாய் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைக் கண்டு விசாரித்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!