News January 2, 2025
ஈரோடு: கீழே விழுந்து மின் ஊழியர் பலி!

கோபி அருகே கொளப்பள்ளூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் கெட்டி செவியூர் மின்வாரிய அலுவலகத்தில், பணியாற்றி வருகிறார். கெட்டிசெவியூர் அரசு பள்ளி அருகே உள்ள, மின் கம்பத்தில், பழுது பார்க்க ஏறும் போது, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தவர், தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
கோபி: செங்கோட்டையனை எதிரித்து மனு

கோபி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடுவார் என்ற சூழலில் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவரின் அண்ணன் மகன் கே.கே. செல்வன் அதிமுக சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது மேலும் கோபியில் போட்டியிட மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வி.கே. சி.சிவகுமார் விருப்ப மனுவை வழங்கியுள்ளார்.
News December 24, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு….

பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது, பாதுகாப்பிற்காக வரிக்குதிரைக் கோடுகளை (Zebra Crossing) கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவை பாதசாரிகளுக்கான பாதுகாப்பான இடத்தைக் குறிக்கின்றன, வரிக்கோடுகளைப் பயன்படுத்தும்போது, சாலையைக் கடப்பதற்கு முன் இருபுறமும் பார்த்து, வாகனங்கள் முழுமையாக நின்ற பின்னரே கடக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
News December 24, 2025
ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


