News March 27, 2024
ஈரோடு காவல்துறை தேர்தல் பார்வையாளர் நியமனம்

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு காவல்துறை தேர்தல் பார்வையாளராக, ராம கிருஷ்ண ஸ்வரண்கர் ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான ராம கிருஷ்ண ஸ்வரண்கர் இன்று முதல் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு பணி ஆய்வுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
BIG NEWS ஈரோட்டில் டெங்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவநிலை மாற்றம் காரணமாக,
காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏழு பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News February 8, 2026
ஈரோடு: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
ஈரோடு அருகே சோகம்: ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சீரகல்லி வனச்சரக ரங்கசாமி கோயில் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை, கரளவாடியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு காவலில் இருந்த மகேஷ் (28) என்ற இளைஞரை யானை மிதித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


