News September 3, 2025

ஈரோடு: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

Similar News

News September 3, 2025

பிளாஸ்டிக்கிற்கு குட்பை சொன்னால் பரிசு நிச்சயம்!

image

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை மட்டும் பயன்படுத்தி வரும் உணவகங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெரிய சிறிய என 2 உணவகங்களுக்கு பரிசுத்தொகையுடன் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு உரிமம் பெற்ற உணவக உரிமையாளர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

மிலாது நபி – ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

image

மிலாது நபியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள், எப்எல்2 மற்றும் எப்எல்3 மதுபான விடுதிகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் வரும் 5-ஆம் தேதி மூடப்பட வேண்டும்.இதை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 3, 2025

ஈரோடு: ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு!

image

ஈரோடு, பவானியைச் சேர்ந்த நாராயணன் என்பவர், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு செய்திருந்தார். இவர் கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த காரணத்தால், நாராயணன் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை நேற்று வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும், ரூ.2 லட்சம் கிடைக்கும்.விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும்.SHAREit

error: Content is protected !!