News October 14, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர்கள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
சென்னிமலையில் மீண்டும் தெரு நாய் அட்டகாசம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், ஓட்டப்பாரை கிராம ஊராட்சி உட்பட்ட இச்சிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சார்ந்த குருநாதன் மகன் கிருஷ்ணன், 14 ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முந்தினம் இரவு வெறிநாய்கள், பட்டியில் மூங்கில் தப்பையை கடித்து உள்ளே புகுந்து, ஆறு ஆடுகளை கடித்ததில், இரண்டு ஆடுகள் இறந்து விட்டது. நான்கு ஆடுகள் படுகாயம் அடைந்து விட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர்.
News October 14, 2025
ஈரோட்டில் வெளுக்கப்போகும் மழை!

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News October 14, 2025
ஈரோடு: 100 % மானியம் வழங்கும் திட்டம் APPLY NOW!

ஈரோடு: நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவ சிறு/குறு விவசாயிகளுக்கு 100 % மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 % மானியமும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக சிறு/குறு விவசாயிகள் 2 எக்டரும், பெரிய விவசாயிகள் 5 எக்டரும் வரை பயன்பெறலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார்,குடும்ப அட்டை, பட்டா, பயிர் அடங்கல், சிறு / குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை வைத்து இந்த லிங்க் <