News September 9, 2025
ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (செப். 9) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
Similar News
News September 10, 2025
ஈரோடு: இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பர் 10ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளன. அன்னபூரணி மஹால், சாஸ்திரி நகர் (ஈரோடு மாநகராட்சி மண்டலம்4) , மீனாட்சி திருமண மண்டபம் (பவானி நகராட்சி), ராசம்மாள் திருமண மண்டபம் (அவல்பூந்துறை பேரூராட்சி), ஜெ எஸ் மஹால் (கொளப்பலூர் பேரூராட்சி), ஸ்ரீ குமார் மஹால், விஜயபுரி (பெருந்துறை வட்டாரம்), PUMS தாமரைக்கரை (பர்கூர்) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
News September 9, 2025
ஈரோடு: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.22,000!

ஈரோடு மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 9, 2025
கால்நடைகளுக்கு கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி

ஈரோடு மாவட்டத்தில் மாடுகளுக்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கால்நடை பராமரிப்பு துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதிகளில் கால்நடை மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.