News October 31, 2025
ஈரோடு: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 31, 2025
ஈரோடு: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News October 31, 2025
ஈரோடு: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தையல் பயிற்சி முடித்ததற்காக சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர் போன்ற உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News October 31, 2025
மாநகராட்சி அலுவலகத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாமன்றக் கூட்டம் மேயா் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர் கலந்துகொண்டனர். அப்போது கடந்த 2 மாதங்களாக ஊராட்சிக்கோட்டை குடிநீா் முறையாக விநியோகம் செய்யவில்லை, மாநகராட்சி பகுதியில் பாதையை சீரமைக்கவும், பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் இல்லை, ஈரோடு பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் என 41 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


