News March 10, 2025
ஈரோடு: ஆவின் பாலகம் அமைத்திட ஊக்கத்தொகை

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ஆவின் பாலகம் அமைத்திட ரூ.50,000/- ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News August 18, 2025
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்!

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று (18.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உட்பட பலர் உள்ளனர்.
News August 18, 2025
ஈரோடு: டிகிரி முடித்திருந்தால்.. ரூ.64,000 சம்பளம்!

ஈரோடு மக்களே.. Repco வங்கியில் காலியாக உள்ள 30 Customer Service Associate/Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News August 18, 2025
ஈரோடு: மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், வரும் ஆக.20ம் தேதி காலை, 11 மணிக்கு பெருந்துறை சேனடோரியம் கருமாண்டி செல்லிபாளையம் செயற்பொறியாளரின், பெருந்துறை கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி மக்கள், குறைகளை கூறி நிவர்த்தி பெறலாம்.