News March 19, 2024
ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி

அந்தியூர் அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (27) கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது பைக்கில் ஆப்பக்கூடல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தபால் அலுவலகம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரியை டிரைவர் பின்னோக்கி இயக்கியதில் லாரி பரமேஸ்வரன் பைக் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
ஈரோடு: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
News August 8, 2025
ஈரோடு மக்களே முற்றிலும் இலவசம்!

ஈரோட்டில் உள்ள, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, வரும் 18ம் தேதி, பெண்களுக்கான இலவச தையல்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 31 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், பயிற்சி, சீருடை, உணவு, விடுதி வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 8778323213 என்ற எண்னை அழைக்கவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 7, 2025
சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தேவராஜ். இவர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக விரோத செயல்கள் குறித்து உடனடியாக கண்டறிந்து, குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.