News January 8, 2026
ஈரோடு அருகே விபத்தில் ஜோதிடர் பலி

டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் மணிகண்டன். இவர் சத்தி-அத்தாணி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அப்போது அவ்வழியாக வந்த லாரி மணிகண்டன் மீது மோதியது. இதில், அவர் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 18, 2026
ஈரோடு: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News February 18, 2026
சத்தி அருகே வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது

சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த பார்வதி என்பவர் கஞ்சா விற்பனை செய்ததை கண்டறிந்தனர். சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பார்வதியை கைது செய்த போலீசார் 50,000 மதிப்புள்ள 2.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
News February 18, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! ”நல்ல செய்தி”

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிலங்களை, நிபந்தனையற்ற ‘அயன்பட்டாவாக’ மாற்ற அரசு வழிகாட்டியுள்ளது. இதற்காக பிப்.18 இன்று கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நில உரிமையாளர்கள் அசல் ஒப்படை ஆணை, பட்டா மற்றும் வில்லங்கச் சான்றுடன் www.erode.nic.in/lbp/ என்ற இணையம் (அ) முகாமிலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT


