News December 20, 2025
ஈரோடு அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

புஞ்சைபுளியம்பட்டி அருகே வெங்கநாயக்கள்பாளையம், தேசிபாளையம், புங்கம்பள்ளி, தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், குத்துவிளக்கு. சாமிக்கு அணிவிக்கப்பட்ட தங்க நகை மற்றும் உண்டியல் காணிக்கை ஆகியவற்றை திருடிய வெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தன்ராஜ் (வயது 34), கோவையை சேர்ந்த தர்மராஜ் (32) ஆகியோர் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 1, 2026
ஈரோடு அருகே விபத்து: பெண் பலி

ஈரோட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி நித்யா. இவர்களது உறவினர் சேலத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன், அவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஈரோடு வந்தனர். அப்போது மேட்டூர் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்த போது, அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து மோதியது. இதில் மஞ்சுளா சம்பவயிடத்திலே உயிரிழந்தார். ஆட்டோ, ஓட்டுனர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
News January 1, 2026
ஈரோடு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News January 1, 2026
ஈரோட்டில் பேருந்து விபத்து

ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு ரயில் நிலையம் செல்வதற்கு தனியார் பஸ் தயார் நிலையில் நின்று இருந்தது. அப்போது அரசு மருத்துவமனை நோக்கி சென்ற அரசு பஸ் முந்தி செல்ல முயன்றது. எதிர்பாராத விதமாக 2 பஸ்களும் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இரு பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


