News March 21, 2024

ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

Similar News

News December 30, 2025

ஈரோடு: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

image

ஈரோடு மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 30, 2025

ஈரோடு வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News December 30, 2025

ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் பாம்பால் பரபரப்பு

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின் போது பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கழிப்பறை அருகே விஷப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்த பொதுமக்கள் கண்டனர். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சுமார் 3 அடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்தனர்.
பிடிபட்ட பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!