News January 24, 2026
ஈரோடு அருகே சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு பவானியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன். கட்டட தொழிலாளியான இவர், ஜாம்பை பகுதியில் உள்ள மேஸ்திரி தேவராஜ் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, அங்கே உள்ள டெய்லர் ரூமில் நேற்று முந்தினம் தூங்கியுள்ளார். தேவராஜ் நேற்று காலை அன்பழகனை எழுப்ப சென்றார். அறைக்குள் மின் விசிறியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 2, 2026
அம்மாபேட்டையில் தட்டி தூக்கிய போலீஸ்: அதிரடி கைது!

அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூனாச்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 41 அவர் கர்நாடக மாநில மது பாட்டில்கள் குட்கா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 2, 2026
ஈரோட்டில் பெரும் முறைகேடா?

ஈரோடு அருகே காரைவாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் லுங்கி குடோன் உள்ளது. அங்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் அங்கு வந்த ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இது குறித்து எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, இதனால் மக்கள், ஊடகத்தினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
News February 1, 2026
ஈரோடு: வாக்காளர்கள் கவனத்திற்கு

ஈரோடு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க


