News January 2, 2025

ஈரோடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் 

image

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, மாநில அளவிலான கலைத்திருவிழா நாளை (ஜன.3) மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா ஈரோடு மாவட்டத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் அறிவியல் வணிகவியல் கல்லூரி, கங்கா பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.

Similar News

News November 9, 2025

நம்பியூர் அருகே சோகம்

image

நம்பியூா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி. இவர் கவுன்சிலராக உள்ளாா். இவரது கணவா் குமாரசாமி. இவர் கடந்த 6-ம் தேதி எலத்தூரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 9, 2025

சத்தியமங்கலம் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

image

சத்தி நகராட்சியில் புதிதாக கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில், பலா் அதற்கு சொத்துவரி விதிப்பு செய்யப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். மேலும் வீட்டில் மேல்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கும் சொத்துவரி செய்யப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளதால், அதனை விரைவில் செலுத்த சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 9, 2025

பனை விதை நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்

image

பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மூலம் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு வேளாண்மை வளாகத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் 2000 பனை விதைகள் இன்று நடப்பட்டது அந்தியூர் பவானி கீழ்வாணி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.

error: Content is protected !!