News June 15, 2024
ஈரோடு: யானை தாக்கி ஒருவர் பலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் சுஜில் குட்டை என்னும் இடத்தில் முனியப்பன் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் வெங்கடாசலம் (25) என்பவர் வழக்கம்போல தோட்டத்தில் பூசணிக்காய் பாதுகாப்பிற்காக படுத்து உறங்கினார். இந்நிலையில், அதிகாலை ஒரு மணி அளவில் திடீரென வந்த ஒற்றை யானை அவரை தாக்கி மிதித்ததில் வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Similar News
News March 1, 2026
ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News March 1, 2026
கோபி தொகுதியில் திமுக வேட்பாளர் இவரா?

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது விருப்பமனுவை வழங்கினார். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் திரளாக உடனிருந்து அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
News March 1, 2026
ஈரோட்டில் இழந்த பணம்: வட்டியுடன் வழங்கல்!

பவானியில் ‘சன் மைக்ரோ பைனான்ஸ்’ மூலம் கடன் தருவதாகக் கூறி முன்பணம் பெற்று மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 20 பேருக்குப் பணம் மீட்டுத் தரப்பட்டுள்ள நிலையில், மற்ற பயனாளிகளும் உரிய ஆதாரங்களுடன் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என டி.எஸ்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 94981 72888 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.


