News April 1, 2024
ஈரோடு: பாஜக வேட்பாளர் மீது வழக்கு

திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தம் தற்காலிக தேர்தல் கட்சி அலுவலகத்தை அனுமதி பெற்ற தேதிக்கு முன்பாக திறந்து வைத்ததாக தேர்தல் அதிகாரி பூபாலன் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து பாஜக வேட்பாளர் முருகானந்தம் மற்றும் தெய்வசிகாமணி ஆகியோர் மீது அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Similar News
News October 18, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
ஈரோடு அருகே வாய்க்காலில் விழுந்து ஒருவர் பலி

ஈரோடு, பெருந்துறையை அடுத்த வீரச்சிபாளையத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (67). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முந்தினம் பாலக்கரை அருகில் கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 18, 2025
ஈரோடு: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <