News April 16, 2024

ஈரோடு: அனைத்தும் தயார்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 ஆயிரத்து 896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 14, 2026

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் மகளிருக்கு தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சு. முத்துசாமி பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை நேரில் வழங்கினார். இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

News February 14, 2026

ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ஈரோடு மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வந்து விடுவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

ஈரோடு: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனைஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!