News March 31, 2026

ஈரான் போர்: சிமென்ட், கம்பிகள் விலை உயர்கிறது!

image

சிமென்ட் விலை நாளை முதல் மூட்டைக்கு ₹50- ₹70 வரை உயரும் என தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஈரான்-அமெரிக்கா இடையே நிலவும் போரால், சிமென்ட் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் வளைகுடா நாடுகளிலிருந்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், சிமென்ட் விலை உயர்த்தப்படுகிறது. இதேபோல், கட்டுமான கம்பிகள் விலை டன்னுக்கு ₹2,000 வரை உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 10, 2026

பிஹாரின் அடுத்த முதல்வர் யார்?

image

தேசிய அரசியலுக்குள் <<19614648>>நிதிஷ் <<>>நுழைந்துவிட்டதால், பிஹாரின் அடுத்த முதல்வர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தற்போது முதல்வர் ரேஸில் பாஜகவின் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமையின் ஆதரவு உள்ளதால் சாம்ராட் சௌத்ரிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக பேசப்படுகிறது.

News April 10, 2026

மகளிர் உரிமைத் தொகை.. NEW UPDATE

image

மாநில அளவிலான அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் பென்சன் உள்ளிட்ட பயனாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள் வேறு திட்டத்தில் பயனாளிகளாக இருந்தால், அவர்களுக்கு உரிமைத் தொகை நிறுத்தப்படும். அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்றடைவதே இதன் நோக்கம்.

News April 10, 2026

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. 5.7 லட்சம் குடும்பங்கள் பதிவு

image

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் ஒருபகுதியாக சுய கணக்கெடுப்பு ஏப்.1 முதல் தொடங்கியது. இதன்மூலம், பொதுமக்கள் தாங்களாகவே ஆவணங்களை பூர்த்தி செய்து டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். முதல் கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை, 5.72 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். TN-ல் ஜூலை 17, 2026 முதல் தொடங்க உள்ளது.

error: Content is protected !!