News January 16, 2026
ஈரானில் 12,000 பேர் பலி.. நாடே சோகத்தில் ஆழ்ந்தது!

ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனதை உலுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள போட்டோக்கள் வெளியாகி, பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை வாங்க வேண்டும் அல்லது வெகுஜன புதைகுழியில் புதைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News January 30, 2026
கணவர் ‘குரங்கு’ என்றதால் மாடல் அழகி தற்கொலை

குரங்கு மாதிரி இருக்கும் உனக்கு நடிப்பு தேவையா என கணவர் சொன்னதால் மனமுடைந்த நடிகை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவை சேர்ந்த தன்னு சிங்(23) மாடலிங், குறும்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், அவரது கணவர் ராகுல் ஸ்ரீவஸ்தா, தன்னு சிங்கை ‘Bandariya'(குரங்கு) என கேலி செய்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர், பெட்ரூமில் உயிரை மாய்த்துக்கொண்டாராம். யாரையும் உருவக்கேலி செய்யாதீங்க!
News January 30, 2026
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் வாய்ப்புகள் குறைவு: WHO

மேற்கு வங்கத்தில் 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பயப்பட வேண்டாம் என WHO கூறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 196 பேர் அடையாளம் காணப்பட்டு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதாகவும், இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது. மேலும், பயண & வர்த்தக கட்டுபாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
News January 30, 2026
இந்த நதியில் விழுந்தால் வெந்து போவீர்கள்.. அதிசயம்!

ஒரு நதியை பார்த்தாலே அதிலுள்ள குளிர்ந்த நீரில் குளித்து மகிழவேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால், அமேசான் காட்டில் உள்ள Shanay-Timpishka எனும் இந்த நதி முற்றிலும் வித்தியாசமானதே. சுமார் 7 கி.மீ நீளமுள்ள இந்நதியின் வெப்பநிலை சுமார் 100 டிகிரி செல்ஷியஸாக இருக்கிறது. இதில் தப்பித்தவறி விலங்குகள் விழுந்தால் கூட அவை சில விநாடிகளில் உடல் வெந்து உயிரிழக்கும். இந்த அதிசயத்தை அனைவரும் அறிய SHARE THIS.


