News October 12, 2025

ஈரக்கைகளால் ஆபத்து – மின்வாரியம் எச்சரிக்கை

image

மழைக்காலம் தொடங்கியுள்ளதை அடுத்து திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், தினமும் ஒரு விழிப்புணர்வு வாசகத்தை மின் நுகர்வோர், பொதுமக்களுக்கு வெளியிட்டு வருகிறது. இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஈரக்கையால் ஒருபோதும் மின் சாதனங்களை கையாளக் கூடாது. அது ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே கைகளில் ஈரம் இன்றி எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 12, 2025

நெல்லையில் டிஆர்பி தேர்வு; 452 பேர் ஆப்சென்ட்

image

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இன்று முதுகலை ஆசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5527 தேர்வுகள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் 5527 பேரில் 5075 பேர் மட்டுமே தேர்வெழுத வந்தனர். 452 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News October 12, 2025

நெல்லை: வாகன அபராதத்தை ரத்து செய்யலாம்!

image

நெல்லையில் உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு இங்கே க்ளிக் செய்து உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 12, 2025

நெல்லை: இதை செய்ய தவறினால் PAN கார்டு செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!