News July 5, 2025

இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம்

image

கட்டுமான தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் ESIC or EPFO திட்டங்களில் கீழ் வராத தொழிலாளர்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலாளர்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*

Similar News

News December 11, 2025

விழுப்புரம்:மாற்றுதிறனாளிக்கு உதவிய எஸ். ஐ: பாராட்டிய எஸ்.பி!

image

திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிகுடிசை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தனது சொந்த செலவில் கழிப்பறையை காவல் ஆய்வாளர் அழகிரி கட்டி கொடுத்தார். இந்த நிகழ்வை பாராட்டி, இன்று (டிச.11) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரியை,நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

News December 11, 2025

நெடுஞ்சாலைத்துறை தலைவரை சந்தித்த விழுப்புரம் எம்பி

image

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று(டிச.11) டெல்லியில் நெடுஞ்சாலைகள் துறை தலைவர் சந்தோஷ்குமார் யாதவ் அவர்களை சந்தித்து விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைத்தல் மற்றும் பல்வேறு பணிகள் குறித்த கோரிக்கைக் கடிதத்தை வழங்கினார். உடன் விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா பங்கேற்றனர்.

News December 11, 2025

மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களை பாராட்டு

image

(டிச.11) விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களை பாராட்டி ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மருத்துவர்களுக்கு கேடயத்தினை வழங்கினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன் இந்த நிகழ்வில் இருந்தனர்.

error: Content is protected !!