News May 3, 2024
இவர்கள் குறித்து தெரிந்தால் உடனே தெரிவிக்கலாம்!

சேந்தமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியர் பனரோஜா மற்றும் 3 பேரை, பைக்கில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் 6 பேர் அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 குழுக்களை அமைக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளின் போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். தகவல் தெரிந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.
Similar News
News August 26, 2025
நாமக்கல் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.25) வெளியிடப்பட்ட அறிவிப்பில், ’வாகன உரியாளர்மைகளுக்கு போக்குவரத்து விதிமீறல், தொடர்பாக உங்களுக்கு வரும் போலி குறுஞ்செய்தி லிங்குகள், APK File, தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம். உங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கப்படும். மேலும், உதவிக்கு 1930, இணையதள புகார்களுக்கு www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்’
News August 26, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள் இந்நிலையில் இன்று
(ஆகஸ்ட்25) நாமக்கல்- ராஜமோகன் 94422-56423, ராசிபுரம்-சின்னப்பன் 94981-69092, குமாரபாளையம்- செல்வராஜு 99944-97140, பள்ளிபாளையம்- டேவிட் பாலு 94865-40373, வேலூர்-ரவி 94981-68482 ஆகியோர் உள்ளனர்.
News August 26, 2025
திருச்செங்கோட்டில் உயர்வுக்கு படி முகாம்!

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில், வரும் (28-08-2025) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ‘உயர்வுக்கு படி’ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல், அரசு கலை (ம)அறிவியல் கல்லூரி/ பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை உள்ளிட்ட வாய்ப்புகள் செய்து தரப்படுகிறது.