News November 26, 2025
இவர்களெல்லாம் சுக்கு மல்லி காபி குடிக்கக்கூடாது

சுக்கு, மல்லி, மிளகு, கருப்பட்டி ஆகியவற்றை இடித்து, நன்றாக கொதிக்க வைத்து குடிக்கும் சுக்கு மல்லி காபியால் பல நன்மைகள் இருந்தாலும், அதனை ஒரு சிலர் தொடர்ந்து குடிப்பது நல்லதல்ல. நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப்போக்கு அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு 1 (அ) 2 முறை மட்டுமே பருகலாம் என டாக்டர்கள் கூறுகின்றன. மேலும், அறுவை சிகிச்சைகளுக்கு முன்பும் குடிக்கக்கூடாது. Share it.
Similar News
News April 9, 2026
தூக்கத்தில்கூட ஸ்டாலின் புலம்புகிறார்: அன்புமணி

வார்த்தைக்கு வார்த்தை பாஜக எனக் கூறி ஸ்டாலின் ஏன் அக்கட்சிக்கு இவ்வளவு பயப்படுகிறார் என்று அன்புமணி கேட்டுள்ளார். ராணிப்பேட்டை பிரசாரத்தில் பேசிய அவர், தூக்கத்தில் கூட பாஜக பாஜக என புலம்பும் ஸ்டாலின், யாராவது தும்மினால் கூட அதற்கும் பாஜகவே காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கூட்டணியில் பாஜக உள்ளதால், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை EPS பெற்றுத் தருவார் என கூறியுள்ளார்.
News April 9, 2026
புதுச்சேரியை ஆளப் போவது யார்? தொடங்கும் வாக்குப்பதிவு!

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 1,099 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும் இத்தேர்தலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஆளும் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணி, காங்கிரஸ் – திமுக கூட்டணி, தவெக மற்றும் நாதக என 4 முனைப் போட்டி நிலவும் நிலையில், மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
News April 9, 2026
தீராத பிரச்னைகளை தீர்க்கும் வெண்பூசணி வழிபாடு

புதுக்கோட்டை, திருமயத்தில் 350 ஆண்டுகள் பழமையான கோட்டை பைரவர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி, தனிக்கோயில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே. இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வெண்பூசணி விளக்கேற்றி வழிபடுவது, அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உதவுமாம். பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் அபிவிருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.


