News April 21, 2025
இளைஞர் கதையை முடித்த மாஜி ஏட்டு

மதுரை, ஆனையூர், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், திருச்சியில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டுக்கு அருகே குடியிருந்தவர் அழகுபாண்டி, கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம்.நேற்று, போதையிலிருந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நடராஜன், வீட்டிற்குள் புகுந்து, அழகுபாண்டியை அரிவாளால் வெட்டினார். அந்த இடத்திலேயே அவர் பலியானார்.
Similar News
News August 5, 2025
JOB ALERT மதுரை கூட்டுறவு வங்கியில் வேலை

மதுரை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கும் மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மதுரைக்கு சுமார் 60க்கு மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே<
News August 5, 2025
மதுரையில் எந்தப் பதவியில் யார் ..?

▶️மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
▶️போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
▶️மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.
News August 5, 2025
கஞ்சா கடத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மதுரை பாத்திமா கல்லூரி அருகே திண்டுக்கல்லில் இருந்துவந்த பேருந்து ஒன்றில் 4 பேர் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், மதுரையைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் (23), சிவராமபாண்டியன் (22), அருண் பாண்டியன் (26), பிரத்வி ராஜ் (26) எனத் தெரியவந்தது. சுமார் 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.