News June 18, 2024

இளைஞர் கடத்தல் – 10 பேர் கும்பலுக்கு வலை

image

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன்(30). இவர் மதுரவாயல் பகுதி உறவினர் வீட்டில் 2 மாதமாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூன்.17) பூந்தமல்லி அருகே மேட்டுக்குப்பம் சாலையில் ஹர்ஷவர்த்தன் வந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ஹர்ஷவர்த்தனை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

Similar News

News July 8, 2025

ஹவுஸ் ஓனருடன் பிரச்சனையா?

image

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445000412 (வாடகை அதிகாரி) புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி <>வாடகை அதிகாரியிடம்<<>> புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க. <<16989972>>தொடர்ச்சி<<>>

News July 8, 2025

வாடகை வீட்டில் இருப்போருக்கான உரிமைகள்

image

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்

News July 8, 2025

உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!