News March 30, 2025
இளைஞர் அடித்து கொலை: 5 பேர் கைது

சென்னை துரைப்பாக்கத்தில், பெண் விவகாரத்தில் தாக்கப்பட்ட இளைஞர் இன்று (மார்.30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீவரத்தினம் என்ற இளைஞரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். CSK அணியை கிண்டல் செய்ததற்காக முதலில் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பெண் விவகாரம் என பின்னர் தெரியவந்துள்ளது.
Similar News
News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
News April 1, 2025
ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
News April 1, 2025
கோர விபத்தில் 3 பேர் பலி

செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட லாரி ஒன்று சிங்கப்பெருமாள் கோவில் அருகே திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. அப்போது, மற்றொரு டிப்பர் லாரி கார் மீது மோதியது. இதில், கார் நசுங்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூவர் பலத்த காயம் அடைந்தனர்.