News August 15, 2025
இளைஞர்கள் நீதி குடும்பத்தில் சமூகப் பணியாற்ற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் இன்று வெளியிட்டிருக்கும் செய்தியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இளைஞர் நீதி குடும்பத்திற்கு சமூகப் பணி உறுப்பினர் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துக்கப்பட்டுள்ளது. 35 வயது கடந்தவராகவும் 65 வயதை கடக்காதவராகவும் இருக்க வேண்டும். உரிய கல்வித் தகுதியும் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
நெல்லை: பல் பிடுங்கிய விவகாரம் – உச்சநீதி மன்றம் கேள்வி

அம்பை சரகத்தில் ஏ எஸ் பி யாக இருந்த பல்வீர் சிங் பற்கள் பிடுங்கியதாக குற்றச்சாட்டில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை ஐகோர்ட்டு கிளையில் பல்வீர் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சமீம் அகமது மனுதாரர் போதைப்பொருள் கடத்தல் தடுத்து நடவடிக்கைக்காக உயர் அதிகாரி பாராட்டை பெற்றிருக்கிறார். எஸ் ஐ அளித்த புகாரில் எவ்வாறு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என கேள்வி எழுப்பினார்.
News November 12, 2025
நெல்லையில் ரூ.21,000 சம்பளத்தில் வேலை – APPLY!

மகளிர் அதிகார மையத்தில் பாலினர் வல்லுநர் பணிக்கு தகுதி உள்ள நபர் தேர்வு செய்யப்பட உள்ளார். சமூகப் பணி சமூகவியல் துறையில் இளங்கலை பட்டம் 3 வருட அரசு தனியார் தொண்டு நிறுவனங்களில் மகளிர் முன்னேற்றம் தொடர்பாக பணிபுரிந்து அனுபவம் அதிகபட்ச வயது 40. சம்பளம் 21,000 ஆகும் விண்ணப்பத்தை tirunelveli.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
News November 12, 2025
நெல்லையில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே கேட் மூடல்

நெல்லை அருகே கைலாசபுரம் – கீழக்கோட்டை வழித்தட ரயில்வே கேட் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று (நவ.12) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்படுகிறது. இந்த கேட் வழியாக செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் இயக்க போலீசாருக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வே நெல்லை சீனியர் செக்சன் இன்ஜினியர் தெரிவித்துள்ளார்.


