News March 21, 2025
இளைஞர்களுக்கான புத்தாக்க பொறியாளர் பயிற்சி

தமிழ்நாடு ஆதித் திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, தாட்கோ வாயிலாக, புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 21 முதல், 25 வயதுக்கு உட்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், லிங்க் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 6, 2025
அரியலூரில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோலார் டெக்னிஷீயன் (Solar Technician) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய டெக்னிஷீயன்கள் <
News April 6, 2025
வரதட்சணை கொடுமை: குடும்பத்தோடு சிறை

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வனுக்கும், ஜெயங்கொண்டத்தில் கல்லூரி படித்து வந்த மாணவிக்கும் 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வெற்றிச்செல்வன், அவரது பெற்றோர் மற்றும் அக்கா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் பெண்ணை கொடுமைப்படுத்திய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது
News April 5, 2025
அரியலூர்: திருமணத் தடை தீர்க்கும் நந்தி பகவான்

அரியலூர், திருமழபாடி என்ற ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றது. இங்கு திருமணம் தடை இருப்பவர்கள், திருமணம் தாமதமாபவர்கள் எல்லாம் பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தியின் திருமணத்தை பார்த்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மணமுடிக்காத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.