News January 14, 2025
இளம் வல்லுனராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு திட்டங்களின் விவரங்கள் சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில், இளம் வல்லுனராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கணிப்பொறி, தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளர் படித்தவர்கள் வரும் 23ம் தேதிக்குள் ddsooty@gmail.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News August 20, 2025
நீலகிரி: இலவச பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!

நீலகிரி மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <
News August 20, 2025
நீலகிரி: ஆயுதப் படையினருக்கான சிறப்பு கலந்தாய்வு

நீலகிரி மாவட்டம் உவமையிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம், காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் பொதுவாக நடைபெறும். இதில் இன்று ஆயுதப் படையினருக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டமானது நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை எஸ்பியிடம் தெரிவித்தனர்.
News August 20, 2025
நீலகிரி: ரூ.1,00,000 தொகையுடன் கூடிய விருது!

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் உள்ள உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ரூ.1,00,000 தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்களுக்கு ரூ.50,000 தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 31.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தினை அணுகவும். SHARE பண்ணுங்க!