News April 5, 2025

இளம் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது 

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் டால்னியா. இவர் சென்னையில் பணிபுரிகிறார். நேற்று, வீட்டில் இருந்த டால்னியாவை முன்விரோத தகராறு காரணமாக அவரது சித்தப்பாக்கள் இருவரும் தாக்கினர். இதில், பலத்த காயம் அடைந்த இவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News September 15, 2025

கள்ளக்குறிச்சி : ரிசர்வ் வங்கியில் 1லட்சம் வரை சம்பளம்!

image

இந்தியாவின் வங்கிகளில் தலைமையாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பட இருக்கிறது. அதிகாரி (DR) General அதிகாரி போன்ற பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 55,000 முதல் 1,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-30குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர்

News September 15, 2025

கள்ளக்குறிச்சி: மனவேதனையில் ஒருவர் தற்கொலை!

image

பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் – அசோதை என்பவரது மகன் ராஜதுரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அப்போது முதலே கோவிந்தன் மனவேதனையில் இருந்து வந்த நிலையில் கடந்த 7-ம் தேதி வீட்டின் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News September 15, 2025

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று செப்டம்பர் 15 காய்கறிகளின் விலை நிலவரம் 1கிலோ மதிப்பீட்டில் தக்காளி 20 ரூபாய் கொத்தவரங்காய் ரூபாய் 40 முள்ளங்கி ரூபாய் 30 கத்தரிக்காய் ரூபாயை 40 அவரைக்காய் ரூபாய் 50 சுரைக்காய் ரூபாய் 20 பூசணி ரூபாய் 25 பிரண்டை 60 உருளைக்கிழங்கு ரூபாய் 40 முருங்கைக்காய் ரூபாய் 60 பாகற்காய் ரூபாய் 40 பச்சை மிளகாய் ரூபாய் 45 இஞ்சி ரூபாய் 80 என்று விற்பனையாகிறது.

error: Content is protected !!